இன்னமும் மதம் குறித்த கேள்விகள் நம்முள் எழுப்பும் உணர்வுகள் எனக்கு வியப்பாக இருக்கிறது.
20-25 வயதில் நண்பர்களுடன் வெளியில் சாப்பிடப் போன சமயங்களில், அவரவர் விருப்பத்துக்கு வாங்கி சாப்பிட மாட்டோம். குழுவில் யாராவது ஒருவர் சொல்வதையே அனைவரும் சாப்பிட வேண்டும். யாராவது தனி விருப்பம் தெரிவித்தால் மற்றவர் மனம் வருந்தும். மத விஷயத்தில் நாம் இன்னும் அந்த நிலையில்தான் இருக்கிறோம்.
சிந்திக்கும்போது, மதம் குறித்த கேள்விகளை உணர்ச்சி வயப் படாமல் விவாதிக்கும் பக்குவம் இன்னும் நமக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது. நான் நம்புவதை நீங்களும் நம்ப வேண்டும். இன்று இல்லை என்றால் என்றாவது என் வழிக்கு வந்து விடுவீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
Religion, Spirituality என்ற இரண்டையும் மத நம்பிக்கை என்று கொண்டு குழம்புவது தமிழ்ச் சூழலில் பொதுவானது.
நட்டு வைத்த கல்லுக்குள் (மண், செம்பு, பித்தளை, ஐம்பொன்) கடவுள் குடியிருப்பதாக நம்பி, அவரைத் திருப்தி செய்ய சுற்றி வருவது, நெய் பால், பழம் போன்றவற்றால் அபிஷேகம் செய்வது, துதி பாடுவது, தீ மிதிப்பது, அலகு குத்ததிக் கொள்வது, உயிர்ப் பலி கொடுப்பது, மொட்டை போட்டுக் கொள்வது, மண் சோறு திண்பது முதலான அறிவுக்கு ஒவ்வாத காரியங்களைச் செய்வதையே நாம் மதம் என்று நினைத்துக் கொள்கிறோம். இவற்றைச் செய்யாதவர்கள் அல்லது வெறு வகைகளில் செய்பவர்கள் ’நாம்’ என்ற வட்டத்துக்குள் வர நாம் உடன் படுவதில்லை. பல நேரங்களில் அவர்களை நாம் எதிரிகளாகவே பார்க்கிறோம்.
மதம் என்பது ஒரு நிருவணம் என்பதும், இதனால் பலனடைவோர் நட்டம் அடைவோர் உண்டு என்பதும், சமூக ஏற்றத் தாழ்வுகள் கடவுளின் பெயராலும் வேதம், புராணம், இதிகாசம், ஆகமம் என்று சொல்லப் படுகின்ற புனித நூல்களின் துணையோடும் கட்டமைக்கப் பட்டிருக்கிறன என்பதும் நம் கவனத்துக்கு வருவதில்லை.
கடவுள் என்பதின் மேல் நாம் கொள்ளும் குருட்டு நம்பிக்கைதான் இத்தைய கட்டுக்கள் தொடர்வதற்குக் காரணமாக இருக்கிறது என்பதையும் நாம் உணர்வதில்லை.
இன்று உலகம் முழுவதும் மனிதன் அடைகின்ற துன்பங்களுக்கு அவனது மத நம்பிக்கையும் அதன் காரணமாக சக மனிதன் மேல் அவன் கொள்ளும் விருப்பு வெறுப்புகளுமே என்பதும் உணரப் படுவதில்லை.
கோவில் உண்டியலில் காசை - பொன்னை - பொருளைப் போடுவதால் கடவுள் அகம் மகிழ்வார் / வரம் தருவார் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் ஆச்சரியத்தைத் தருகிறது.
இந்த உலகம் - ஏன் அண்டம் பேரண்டங்களும் கூட - அவனால் படைக்கப் பட்டது என்று நம்புகிறவர்கள், அவன் படைத்த தங்கத்தில் மில்லியனில் ஒரு பகுதிக்கும் பொறாத ஒரு துணுக்கை, நெய்யை, பாலை, பழத்தை - அவனுக்குத் தந்துவிட்டு அதற்க்காக கடவுள் தான் செய்யும் தவறுகளை எல்லாம் மன்னிப்பார் என்றும் நாம் பெறத் தகுதி இல்லாத நன்மைகளை நமக்குச் செய்வார் என்றும் நினைப்பது சரியா?
மதம் என்பது Spirituality என்று கொள்ளப் படுமானால் எனக்கு பெரிய குறை ஒன்றும் இல்லை. நான் புரிந்துகொண்டிருக்கும் வகையில் அது நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்கள், இயற்கை, இந்த உலகம், அண்டம் முதலியவற்றைப் பற்றியும் சிந்திப்பதும் அந்த சிந்தனை வழி நாம் வாழ வகுத்துக் கொள்ளும் வாழ்க்கை முறையும் என்றே நினைக்கிறேன்.
சுருக்கமாகச் சொன்னால், கேள்வி கேட்காதே! இப்படித்தான் நீ வாழ வேண்டும். இதுதான் கடவுளுக்குப் பிடித்தது என்று சொல்வது மதம்.
விடை காண முடியாத் கேள்விகளைக் கேட்டு, மனதைப் பக்குவப் படுத்தியும் tentative-ஆக, உத்தேசமாக வாழும் வழியைச் சொல்வதும் Spirituality.
While I do not subscribe to any religion, I am always open to spiritual questions.